Sunday 31 August 2014

வாழ்க வளமுடன்- ஜோதிட ஆராய்ச்சி மையம் : இப்படி ஒரு ஆண் கிடைத்தால்

வாழ்க வளமுடன்- ஜோதிட ஆராய்ச்சி மையம் : இப்படி ஒரு ஆண் கிடைத்தால்: இப்படி ஒரு ஆண் கிடைத்தால் அவனை நிச்சயம் இழந்து விடாதீர்கள். 1) எந்த ஒரு கடும் கோபத்திலும் எல்லை மீறி தகாத வார்த்தைச் சொல்லிவ...

Saturday 23 August 2014

இப்படி ஒரு ஆண் கிடைத்தால்

இப்படி ஒரு ஆண் கிடைத்தால்
அவனை நிச்சயம் இழந்து விடாதீர்கள்.
1) எந்த ஒரு கடும் கோபத்திலும்
எல்லை மீறி தகாத வார்த்தைச்
சொல்லிவிட்டு வாய்
தவறி வந்தது என்றுச் சொல்லமாட்டார்.
2) உங்களின் மோசமானச் சமையலையும்
சிரித்துக் கொண்டே சாப்பிடுவார்.
3) எந்த ஒரு சண்டையிலும் உங்கள்
குடும்பத்தாரை இழுத்துப் பேச
மாட்டார். ஒவ்வொரு சண்டையின்
பின்னும் உங்களை இன்னும் ஆழமாய்
நேசிப்பார்.
4) மற்றவர் முன் உங்களை விட்டுத் தர
மாட்டார். உங்கள்
குறைகளை நிறைகளாக்க
முயற்சிப்பார்.
5) உங்கள் மனதை ஆழமாய் நேசிப்பதால்,
எத்தனை அழகான பெண்கள் முன்னும்
நீங்கள் மட்டுமே அவர் கண்ணுக்கு அழகாய்
தெரிவீர்கள்.
6) உங்கள் முகம் சிரிப்பிழந்த நாட்களில்,
அவரால் அலுவலகத்தில் வேலை செய்ய
முடியாது. வேறு எந்த வேலையிலும்
கவனம் செல்லாது .
7) உங்களை எந்த ஒரு பெண்ணுடனும்
ஒப்பிட்டுப் பேச மாட்டார். எந்த
ஒரு பெண்ணைப் பற்றியும் உங்களிடம்
பேசவும் மாட்டார்.
8. உங்களை தொலைவில் இருந்துப்
பார்த்தேனும் ரசிக்க தவமிருப்பார்.
உங்கள் மௌனங்கள் அனைத்தையும்
அழகாய் மொழி பெயர்ப்பார்.
9) அவர் குடும்பத்தில் அனைவருக்கும்
பிடித்த பெண்ணாய்
உங்களை மாற்றிடுவார். எல்லாருக்கும்
ஏற்றார் போல் நீங்கள் நடந்துக் கொள்ள
உதவுவார்.
10) உங்களை வேலைக்காரியாய்,
சமையல்காரியாய் பார்ப்பதை விட்டு,
குழந்தையாய், தோழியாய், தாரமாய்,
தாயாய் பார்ப்பார்.
11) ஆத்திரத்தில் திட்டிவிட்டு, உங்கள்
அழுகை பார்த்து அதிகம் வருந்துவார்.
நீங்கள் சிரிக்கும் வரை அவர்

சிந்தனை இழந்து நிற்பார்.
https://www.facebook.com/s.p.moorthy.pothuvudaimoorthy

பதினாறு செல்வங்கள்:

பதினாறு செல்வங்கள்:
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று பெரியோர் வாழ்த்துகின்றனரே. அந்தப் பதினாறு எவை எவை என்று தெரிந்து கொண்டால் நலமாயிருக்கும் அல்லவா?
அதன் விளக்கம் பின்வருமாறு:-
1.கலையாத கல்வி (வெற்றிக்கு வழிகாட்டக் கூடிய கல்வி)
2.குறையாத வயது (நீண்ட ஆயுள்)
3.கபடு வராத நட்பு (நம்பிக்கையான நல்ல நண்பர்கள்)
4.குன்றாத வளமை (வளமான வாழ்க்கைக்குத் தேவையான பொருள்)
5.குன்றாத இளமை (உழைப்புக்குத் தளராத உடல் வலிமை)
6.கழுபிணி இல்லா உடல் (நோயற்ற வாழ்க்கை)
7.சலியாத மனம் (கலங்காத மனத்திண்மை)
8.அன்பகலாத மனைவி (மாறாத அன்பைச் செலுத்தும் மனைவி)
9.தவறாத சந்தானம் (அறிவு, ஆற்றல், ஒழுக்கம், ஆயுள் இவற்றில் தவறி விடாத
குழந்தைகள்)
10.தாழாத கீர்த்தி (மென்மேலும் வளரக்கூடிய பொருளும் புகழும்)
11.மாறாத வார்த்தை (வாய்மை)
12.தடைகள் வராத கொடை (இல்லையென்று சொல்லாத உதவி)
13.தொலையாத நிதியம் (சிக்கனம், சேமிப்பு பழக்கம்)
14.கோணாத கோல் (நேர்மையும் திறமையும் கொண்ட குடும்ப நிர்வாகம்)
15.உதவி பெரிய தொண்டரோடு கூட்டு (பெருமக்கள் தொடர்பு)
16.துய்ய நின்பாதத்தில் அன்பு (இறை நம்பிக்கை)
இந்த பதினாறும் பெற்று வாழ்ந்தாலே பெருவாழ்வு வாழ முடியும் என்று நம் முன்னோர்கள் கூறினார்கள்.

Thursday 21 August 2014

ஒன்பது தாற்பரியங்களை குறிக்கும் தாலி.
திருமணத்தின்போது பெண்ணிற்கு கட்டப்படும் தாலியும் அதன் மகத்துவங்களும்.
தாலி: தமிழ் பெண்களின் வாழ்கையின் ஆதாரம். திருமணம் ஒரு பெண்ணின் வாழ்வை மாற்றுகிறது. தாலி அதை உறுதிப்படுத்துகிறது.
அந்த மங்கலநாண் திருமணத்தின் போது பொதுவாக ஒன்பது இழைகளால் ஆனதாக அணிவிக்கப்படுகிறது. அவை வாழ்க்கையின் ஒன்பது தாத்பரியங்களை குறிக்கிறது.
அவை:-
1. வாழ்க்கையை உள்ளது உள்ளபடி புரிந்து கொள்ளுதல்
2. மேன்மை
3. ஆற்றல்
4. தூய்மை
5. தெய்வீக நோக்கம்
6. உத்தம குணங்கள்
7. விவேகம்
8. தன்னடக்கம்
9. தொண்டு
ஆகியவற்றை பிரதிபலிக்கின்றன.
இவற்றை ஒரு பெண் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கருத்தில் மாங்கல்யம் அமைக்கப்பட்டதாக காயத்ரி மந்திரம் குறிப்பிடுகிறது. தாலி என்பது திருமணத்தின் போது ஆண் பெண்ணுக்கு கட்டும் ஒருவகை கழுத்து சங்கிலி ஆகும். தாலி அணிந்த பெண் திருமணமானவள் என்பது தாலியின் முக்கிய குறியீடு.
தாலி கட்டும் வழக்கம் இந்து திராவிட மக்களிடம் காணப்படுகிறது.தாலம் பனை என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றையே பண்டைக்காலத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் கட்டி வந்தபடியால் இதற்குத் தாலி என்ற பெயர் வந்தது. தாலமாகிய பனை ஓலையினால் செய்தது என்பது இதன் பொருள். பனை ஓலைத் தாலி அடிக்கடி பழுதுபட்டதால் நிரந்தரமாக இருக்க உலோகத்தால் ஆன தாலி செய்து பயன்படுத்தினர். பின்னாளில் அதனைப் பொன்னால் செய்து பொற்றாலி ஆக்கினர்.http://www.matrimonymatch.com/ ஆயின் தாலியின் உண்மையான அடையாளம் பொன்னில் செய்வதால் அல்ல. வெறுமே ஒரு விரலி மஞ்சளை எடுத்துக் கயிற்றால் கட்டி கழுத்தில் முடிச்சுப் போடுவது கூடத் தாலி தான்.
இயல் மஞ்சளை எடுத்து, வெய்யிலில் காயவைத்து, நீரில்லாமல் வற்றவைத்த மஞ்சளுக்குத் தான் விரலி மஞ்சள் என்று பெயர். விரல் விரலாய் இருக்கும் மஞ்சள் விரலி மஞ்சள். மஞ்சள் கட்டும் கயிற்றுக்கும் மஞ்சள் நிறம் ஏற்றுவார்கள். தாலியின் சூழ்க்குமம் “மஞ்சள், கயிறு, கட்டுதல்” ஆகியவற்றில் அடங்கி இருக்கிறதே ஒழிய, பொன், பணம், சங்கிலி என்பதில் இல்லை. இன்னார் மகன், இன்னார் மகளை இன்னார் சம்மதத்துடன் இன்னார் முன்னிலையில் இந்த நேரத்தில் இந்நாளில் கல்யாணம் செய்துகொள்வதாக அனைவரும் கையொப்பமிட அந்த தாளினை கயிற்றில் கோர்த்து மணமகளின் கழுத்தில் மணமகன் கட்டியதாக ஆய்வு சொல்கிறது.
சுத்துரு, சுத்திரி, மாங்களியம், மங்கலியம், மங்கலவணி என சொல்லும் தாலியை - மண அடையாள வில்லையைக்குறிக்கும் தாலி என்பது மஞ்சள் பொருத்திய நாணை முதலில் குறித்திருக்க வேண்டும்;
http://matrimonymatch.com/index.php
பின்னால் செல்வம் படைத்தோரால் அந்த மஞ்சள் பொன்னாகி இருக்கிறது.
உடனே பொன் தான்,தாலியின் அடையாளம் என்று நாம் பொருள் கொள்ளக் கூடாது. மஞ்சள் தான் அதன் அடையாளம். மற்றும் ‘ஐம்படைத் தாலி, மாமைத் தாலி, ஆமைத் தாலி, புலிப்பல் தாலி, புலிநகத் தாலி ,அம்மன் தாலி போன்றவையும் இருந்து இருக்கிறது

Tuesday 19 August 2014


பொதுஅறிவு:-

* நாம் இறந்த பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.
* சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர். அதனால்தான் இந்த முறைக்கு ‘சீசரியன்’ என்று பெயர் வந்தது.
* பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.
* நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்கும்.
* கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு - இதயம் மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு - இதயம்.
* மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன.
* ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள்.
* மார்க்கோ போலோ என்கிற சிகரெட் நிறுவனத்தின் முதல் உரிமையாளர் நுரையீரல் புற்று நோய் தாக்கி இறந்துப் போனார்.
* பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும்.
* உலகிலேயே மிக சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம் தான்.
* ஒரு தர்பூசணி பழம் இருந்தால் அதில் இருந்து 6 லட்சம் தர்பூசணி பழங்களை உற்பத்தி செய்து விடலாம்.
* பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால் கிலாமிடோமொனாஸ் என்ற ஒரு செல் தாவரம் நகர்ந்து போகும் தன்மை உடையது.
* பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.
* நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை.
* நீல திமிங்கலத்தின் எடை 22 யானைகளின் எடைக்கு சமம். அதன் இதயம் ஒரு சிறிய கார் அளவில் இருக்கும்.
* யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே - யானையின் உயரம்.
* ஒரு புள்ளி அளவு இடத்தை 70,000 (எழுபதாயிரம்) அமிபாக்களால் நிரப்ப முடியும்.
* தரையில் முதுகு படும்படி உறங்கும் ஒரே உயிரினம் - மனிதன்.
* முன்னால் பின்னால் பக்கவாட்டில் என அனைத்து பக்கங்களிலும் பறக்க முடிந்த பறவை - தேன்சிட்டு.
* தேன்சிட்டு, மரங்கொத்தி, போன்ற பறவைகளுக்கு நடக்கத் தெரியாது

Monday 18 August 2014

சுவஸ்திகம் :
சுவஸ்திக் எனப் பொதுவாகக் குறிப்பிடப்படும் சுவஸ்திகம் என்னும் சின்னம் உலகின் பல நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.இது சமய நம்பிக்கைகளுடனும் தத்துவங்களுடனும் தொடர்பு கொண்டது.இதில் இரண்டு கோடுகள் ஒன்றுக் கொன்று குறுக்காக அமைந்து நான்கு முனைகளிலும் 90 டிகிரியில் வலது பக்கம் வளைந்த சமமான நான்கு கோடுகள் உள்ளன.
சிந்துச் சமவெளி நாகரிகத்தில் கிடைத்த பொருட்களில் சுவஸ்திகம் காணப்படுகிறது.உலகின் பல நாகரீகங்களில் இதற்கு இடம் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கீழ்த் திசை நாடுகள் ஜப்பான்,சீனா ,மத்தியத் தரைக் கடல் நாடுகள்,ஐரோப்பா வாடா அமெரிக்கா ஆகிய இடங்களில் சுவஸ்திக சின்னம் கிடைத்துள்ளது.

வடமொழியில் சுவஸ்திகா என்பது நலத்தைக் குறிக்கும்.சீன ,ஜப்பான் மொழிகளிலும் வெவேறு அர்த்தத்தில் உள்ளது.
சுவஸ்திகம் இந்து,புத்த,ஜைன மதங்களில் இடம் பெற்றிருக்கிறது.இந்து மதத்தில் பிரம்மாவின் நான்கு முகங்களாகவும் ,நான்கு திசைகளைக் குறிப்பதாகவும் வருகிறது.புத்த மதப் புத்தகங்களின் ஆரம்பத்தில் ஸ்வஸ்திக் முத்திரை இருக்கும்.ஜைன சமயத்தில் சுவஸ்திகம் முக்கிய சின்னமாகவும்,எட்டு மங்கலங்களில் ஒன்றாகவும் கலந்துள்ளது.சுவஸ்திகத்தில் உள்ள இரு கோடுகளும் இல்லறம் மற்றும் துறவத்தைக் குறிக்கும்.இரு கோடுகளும் சந்திக்கும் புள்ளி கொல்லாமையைக் குறிக்கும்.நடர நான்கு கோடுகளும் எல்லையற்ற அறிவு,எல்லையில்லாத காட்சி அளவில்லாத ஆற்றல்,அளவற்ற இன்பம் ஆகியவற்றைக் குறிக்கும்.இந்த நன்கு குணங்களை மனித உயிர் .தன் அருந்தவப் பயனால் பெற்று,வினைகளை வென்று தீர்த்தங்கரர் ஆக மாறும்.இது அருக பெருமான் அடைந்த குணங்களின் சின்னமாகும்.
உயிர் அதனுடைய வினைகளைப் பொறுத்து ,தேவ கதியாகவும் ,மனித கதியாகவும் விலங்கு கதியாகவும் சுற்றி சுற்றி பிறக்கிறது.தீய குணங்கள் குறைய குறைய பிறவியின் தரம் உயரும்.
எனவே மனிதனின் எல்லா செயல்களும் நல்லதாகவும் அர நெறியுடனும் இருக்க வேண்டும்.நற்காட்சி,நல் ஞானம் ,நல்லொழுக்கம் ஆகியவற்றைக் கடைபிடிக்க வேண்டும்.இறைவன் ஆகமம் மற்றும் குரு மீது நம்பிக்கையும் பக்தியும் வைத்து ,இதனால் முற்றுணர்ந்த நிலையை அடைந்து ,மீண்டும்,பிரவ வீடு பேரை அடையலாம்.இதனை அறிவுறுத்துவதே சுவஸ்திகம் ஆகும்.

Sunday 17 August 2014

மூர்த்தி என்றால் உருவம். கீர்த்தி என்றால் புகழ். உருவத்தில் சிறிதானாலும் புகழில் சாதிப்பதையே இது குறிக்கிறது. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்ற பழமொழியும் இது தொடர்புடையதே. சில தெய்வச் சிலைகள் மிகச் சிறிதாக இருக்கும். ஆனால், அந்த தெய்வமோ சக்தி மிகுதியால் பெரிய அளவில் புகழ் பெற்றிருக்கும். அகத்தியர் உருவத்தில் சிறியவர் தான் என்றாலும், புகழில் எல்லாரையும் விடப் பெரியவர். இது போல மனிதர்களும் தங்கள் உருவக் குறைபாடுகளைப் பெரிதுபடுத்தாமல், சாதிப்பதையே குறிக்கோளாகக் கொள்ள வேண்டும் என்பதையே இது போன்ற முதுமொழிகள் நமக்கு உணர்த்துகின்றன.
இந்த நாளும் இனிய நாளாக எல்லாம் வல்லவனை இறைவனை 
இத்தருணத்தில் வேண்டுகிறேன்
https://www.facebook.com/s.p.moorthy.pothuvudaimoorthy/


Monday 4 August 2014

www.matrimonymatch.com


www.matrimonymatch.com






GENERAL INFORMATION:

What is the purpose of our site?

The purpose of our site is to give you a secure place to meet prospective life partners. We make it as easy as possible for you to contact and meet a vast database of Indian people in your area or from around the world by many different means – instant messenger, email, SMS, telephone, mobile etc. All contact that you make with other members is anonymous, whether you are using email or our messaging and chat systems. Here you'll find a safe community of Indian singles who are using our site to find marriage partners. To find your ideal match, we offer several powerful features, including direct searching, interactive matching and SMS match application that allow you to monitor your contacts even when you are not browsing our actual website.

Are member profiles on this site screened?

Yes - For the safety and security of our members all ads are checked to verify authenticity. All members must supply a valid e-mail address. Member photos are screened for inappropriate content. All images and video files are watermarked to prevent misuse. We also make sure all members meet our standards, i.e.; no profanity, vulgarity, sexual propositions, etc... All our services are confidential and your privacy is as much of a concern to us as it is to our members. Having said this, we cannot carry extensive background checks on each and every member, and we cannot take responsibility for any damage caused to you by use of this site.

One comment: it’s not much different from expecting truthfulness from anyone in the singles environment anywhere. Use caution when communicating with other members. We care very much about our members. Be truthful. Be safe.

What is the difference between entering as a guest and entering as a member?

Our site operates via a membership system, which means that we need to store data files that contain our members’ profile information and other information such as "Favourite lists". Guests are free to browse members’ profiles, but in order to make contact with other members using our emailing services; you must be registered with a valid email address. You must also become a member in order to create a "Favourite list" and use our "EarlyBird" email match service.
We offer the following types of membership:

Basic membership also called Free membership enables you to try out our system and see how it works for FREE. You can search, browse other members' profiles, and even send an express interest messages plus you can use our FavouriteList facility and try out the various components of our search system.

Matrimony Match Silver Membership enables you to:
  • Send an unlimited number of emails
  • Read and reply to messages
  • View members' photo, video and personal descriptions
  • View full lists of New members, EarlyBird matches, and Online members
  • Receive priority replies from our Support Team within 36 hours
  • Save emails in your Mailbox for up to 120 days
  • Search using all of our search options


Matrimony Match Gold Membership enables you to receive all of the benefits of Silver Membership outlined above PLUS:
  • SMS alerts
  • Appear on Featured Member list
  • Make Horoscope compatibility online with prospective member


Matrimony Match Diamond Membership enables you to receive all of the benefits of Gold and Silver Membership outlined above PLUS:


  • Appear on high profile Featured Members Lists
  • Receive top priority on search listings
  • Receive personalised support from our team
  • Receive priority replies from our Support Team within 24 hours


Our Refund Policy:

Our site operates a no-refund policy. This policy is clearly stated prior to you joining, in “Subscription Terms and Conditions”, under both the refund policy agreement and the registration form, which you are required to agree to, before joining our site as a Matrimony Match Silver, Gold or Diamond member.

Unless there is an error in the operation of our program or processes, our system has a no-refund policy after our services have been used. If you feel that our services have been defective in any way, please contact us here with your reasons for claiming a refund, plus a copy of your user registration details and Transaction ID Number or Payment invoice (without this we will be unable to help). Your user registration details and invoice are sent to you upon joining our site.

If granted, all refunds will be made within 30 days of your application. Granted refunds will be on a pro-rated basis, depend upon the length of time that you have used your membership. A small administration charge will be deducted from the amount paid.

We operate within the recommended standards and laws regarding National and International ¬Fair Trading.



சுய முன்னேற்றம்

தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்..
1 நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள். யாரும் சொன்னாலும் ரசித்தாலும் தான், நான் அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களை நீங்களே ரசியுங்கள்.
2. எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள் இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று.
3. உங்களால் எது முடியாது. உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும், அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித் தனமாய் முயற்சி செய்யுங்கள்.
4. என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள். எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை என்பதே உண்மை.
5. உங்களுக்கு எதுவும் தெரியாது. எதிரில் நிற்பவருக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள். இந்த எண்ணம் இருந்தால் நீங்கள் சொல்ல வந்ததை சரியாக தடுமாற்றம் இன்றி சொல்லி முடிக்க முடியாது.
6. கேள்வி கேட்பதற்கும் உங்களை முன் நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம் என்று நினைக்காதீர்கள். உலகில் சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறையப் பேர் மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு தங்கள் கேள்விகளை சரியாக புரியவைத்தவர்கள்.
7. அழும் போது தனியாக அழுங்கள். நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ இங்கு யாரும் வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர எறிந்து விட்டு முன் செல்லுங்கள்.
8. உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில்லை, நிராகரித்த்வருக்கே என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.
# மாற்றத்தை வெளியில் தேடாமல் உங்களுக்குள் தேடினால், தாழ்வு மனப்பான்மையை எளிதில் போக்கி விடலாம்

புதியதாய் வாழ்வது எப்படி



புதியதாய் வாழ்வது எப்படி
யாராலும் பின்னோக்கி சென்று புதிய வாழ்கையை தொடங்க முடியாது. ஆனால் யார் நினைத்தாலும் இன்று தொடங்கி நாளை ஒரு புதிய வாழ்கையை அமைத்துக்கொள்ள முடியும். நாம் புதியதாய் வாழ சில வழிமுறைகள் கீழே.
01.பழைய நினைவுகளிலிருந்து விடுபடுங்கள்
பழையன கழிதலும், புதியன புகுதலும் தான் வாழ்க்கை ஆகையால் மீண்டும் பழையவற்றினை நினைத்து அதற்கு உயிர் கொடுக்காதீர்கள்.
02. வாழ்க்கை பாடத்தை கற்று கொள்ளுங்கள்
நம் வாழ்வில் நடப்பவை அனைத்துமே நமக்கு ஒரு பாடத்தை போதிக்கின்றன, நீங்கள் பழகிய, சந்தித்த, எதிர்நோக்கிய விஷயங்கள் அனைத்தும் உங்கள் வாழ்வின் நீங்கள் சந்தித்த வாழ்க்கை பாடங்களே. அதில் நீங்கள் நிறைய ஏமாற்றங்களும், ஏற்றங்களும் சந்தித்து இருக்கலாம். அவற்றில் நல்லனவற்றை மைல்கல்லாக எடுத்துக்கொண்டு. தீயவற்றினை அனுபவமாக ஏற்று கொள்ளுங்கள்.
03. எதிர்மறை எண்ணங்களை கைவிடுங்கள்.
எதிர்மறை எண்ணங்கள் எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும்,
நேர்மறை எண்ணங்கள் நேர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும். ஆகையால் எப்போதும் நேர்மறையாக சிந்திக்கவும் நினைக்கவும் பழகிக் கொள்ளுங்கள், அது உங்களை மட்டும் அல்லாது உங்களை சார்ந்தவர்களையும் உயர்ந்தவர்களாகும்.
04.பொறுப்பேற்று கொள்ளுங்கள்
உங்கள் வாழ்வில் ஏற்றம் ஏற்பட்டாலும் சரி அல்லது இறக்கம் ஏற்பட்டாலும் சரி அதற்கு முழு பொறுப்பாளர் நீங்களே , எந்த ஒரு விஷயமும் உங்களை மீறி நடைப்பெறாது. அவ்வாறு நடைப்பெற்றால் அதற்கு உங்கள் கவனமின்மையே காரணமேயன்றி வேறு யாரும் அல்லர்.
௦5.எதற்காக வாழ்கிறீர்கள் என்பதனை கண்டறியுங்கள்.
வாழ்க்கை பந்தயத்தில் எதற்காக ஓடுகிறோம் என்பதனை அறிந்து கொண்டு ஓடுங்கள். சிலர் சிறந்த இசையமைப்பாளர் ஆவதற்கும், தொழிலதிபர் ஆவதற்கும் ஓடுகின்றனர், நீங்கள் எந்த இலக்கை நோக்கி ஓடுகின்றீர்கள் என்பதை தெரிந்து கொண்டு ஓடுங்கள்.
06. தேவையில்லாவற்றை ஒதுக்குங்கள்
நீங்கள் என்னவாக போகின்றீர்கள் என்பதை உணர்ந்து அதற்கு உங்களை தயார்படுத்தி அதற்கான சந்தர்பங்களை உருவாக்கிக்கொள்ளுங்கள், தேவையில்லாவற்றினை அறவே ஒதுக்கிவிடுங்கள்.
07. எப்பொழுதும் யதார்த்தமாய் இருங்கள்.
ஒரு செயலையோ, விஷயத்தையோ கடினமாகவும், கண்மூடித்தனமாகவும் பின்பற்றாதீர்கள், யதார்த்தமாய் அதனை உங்கள் வழியில் பழக்கிக்கொள்ளுங்கள், இப்படி செய்வதன் மூலம் ஒரு செயலை நாம் செம்மையாகவும் முழுமையாகவும் கற்றுக்கொள்ளவும், செயல்படுத்தவும் முடியும்.
08. திட்டமிடுங்கள்
நாள் அட்டவணை ஒன்றை உருவாக்கி அதில் நீங்கள் எந்த நேரத்தில் எதை செய்ய வேண்டும், எதை முடிக்க வேண்டும் என்பதனை எழுதி அதன்படி அதனை செம்மையாய் பின்பற்றுங்கள், அது உங்கள் பொன்னான நேரத்தை மிச்சப்படுத்தவும், உங்கள் இலக்கினை சீராக அடையவும் உதவும்.
o9. சுற்றத்தாரை கவர எண்ணாதீர்கள்.
அது உங்கள் நேரத்தை வீணடிக்கும் செயலாகும், நீங்கள் மற்றவர்களுக்கு முன்னோடியாய் இருங்கள் அதுவே அவர்களை கவரும், மாறாக நீங்கள் அவர்களை கவர எண்ணினால் பின்னர் அவர்களை கவரவே சிந்திக்கவும், செயல்படவும் தோன்றும்.
10. பெரிதாய் சிந்தியுங்கள்.
சிறிதாய் சிந்திப்பதை போலத்தான் பெரிதாய் சிந்திப்பதும், அதற்கு நாம் சற்று கூடுதலாக உழைக்க வேண்டும் அவ்வளவே, ஆகையால் எதனையும் பெரிதாய் சிந்தித்து உறுதியாய் செயல்படுங்கள். வெற்றி உறுதி 

pattukkottai jothidam








கோவில் கோபுர உயரம்...
1, ஸ்ரீரங்கம் – 236 அடி
2, திருவண்ணாமலை – 217 அடி ராஜகோபுரம் கிழக்கு.
3, தஞ்சாவூர் – 216 அடி பிரகதீஸ்வரர் கோபுரம்
4, ஆவுடையார் கோவில் – 200 அடி
5, தென்காசி – 178 அடி
6, கங்கைகொண்ட சோழபுரம் – 174 அடி
7, மதுரை – 170.8 அடி தெற்கு கோபுரம்
8, ஸ்ரீவில்லிப்புத்தூர் – 164 அடி வடபத்ர சாயி கோபுரம்
9, மன்னார்குடி – 154 அடி
10, குடந்தை சாரங்கபாணி கோவில் – 147 அடி
11, சிதம்பரம் – 140 அடி வடக்கு கோபுரம்
12, திருவானைக்கா – 135 அடி கீழ கோபுரம்
13, சுசீந்திரம் – 134 அடி
14, திருவாடனை – 130 அடி
15, குடந்தை கும்பேஸ்வரர் – 128 அடி
16, இராமேஸ்வரம் – 126 அடி கிழக்கு கோபுரம்
17, திருச்செந்தூர் – 127 அடி
18, சங்கரன் கோவில் – 125 அடி
19, திருவாரூர் – 118 அடி கீழ கோபுரம்

jothidam

தலைவகிடில் பொட்டு வைப்பது ஏன்?
குங்குமத்தை மோதிர விரலால் தான் நெற்றியில் இட வேண்டும். மற்ற விரல்களைப் பயனபடுத்தக்கூடாது. பெண்கள் தலைவகிடிலும், மாங்கல்யத்திலும், நெற்றியிலும் பொட்டு வைக்கிறார்கள். இந்த மூன்று இடங்களிலுமே லட்சுமி குடியிருப்பதாக ஐதீகம். கோயில்களிலோ, வீட்டிலோ குங்குமத்தை எடுத்து இடது கையில் போட்டுக் கொண்டு, வலது கைவிரலால் தொட்டு வைப்பதும் கூடாது. வீட்டில் யாராவது ஒருவரை வலது உள்ளங்கையில் சிறிதளவே போடச் சொல்லி, வலதுகை மோதிர விரலை வளைத்து குங்குமத்தை தொட்டு நெற்றி
யில் இட வேண்டும்.